அளவற்ற அருளாலனின் திருநாம் போற்றி....
இலங்கையில் மூண்ட போரில் வடகிழக்கு முஸ்லிம்களும் கனிசமான அளவில் பாதிக்கப்பட்டவர்களாவர். புலிகளின் ஆக்கிரமிப்புக்கள், சூரையாடல், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள், கொலை மற்றும் கொல்லை போன்ற இன்னோரன்ன செயல்களால் பாதிக்கப்பட்டு இன்னமும் சுமூக வாழ்க்கைக்குள் நுளைய முடியாமல் தவிக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இலங்கையில் இன்று பொதுவாக காணப்படும் நிலைமையையும் முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லீகள் விடயத்தில் நிலவும் குறிப்பிடத்தக்கதான களநிலைமைகளை நாம் அனைவரும் தெறிந்து கொள்வதோடு, ஊடாக வாயிலாகவும் ஏனைய தகவள் நகர்த்திகள் மூலமாகவும் எமது அரசுக்கும் ஏனைய நாட்டு அரசாங்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய தார்மீக கடமையும்இ பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.
இலங்கை அரசும் வெளிநாட்டு என்.ஜி. ஓக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களின் அபிவிருத்திஇ மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை என்பவை தொடர்பான விடயங்களில் முன்னேற்ற கரமான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றன. இது வரவேற்த்தக்க விடயமாகும். ஆனால் இந்த மீள் சீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முஸ்லீம்கள் தவிர்ந்த தமிழ்மக்களுக்கு மட்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!
விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து காலத்துக்கு காலம் இடம்பெயர்ந்து சென்ற முஸ்லீம்கள் சகல உடைமைகளையும் இழந்து அவர்கள் பரம ஏழைகளாக மாறியுள்ளனர்.
யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோரில் பத்து வீதத்திற்கு மேற்பட்டோர் ஏதோவொரு வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டுகள்ளனர்,. இதனை விட மேலும் பல கோடானுகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும்இ ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களும் கூட யுத்த சமயத்தில் அநியாயமாக இழக்க நேர்ந்துள்ளன.
அரசாங்கம் செயற்படும் முறையை கவனிக்கும் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எந்தளவுக்கு விரைவாக சுமூக நிலையை தோற்றுவிக்க முடியுமென்பது சந்தேகத்துக்குரியதாகும். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அநியாயமான முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களது இயல்பு நிலையை மீள நிலை நிறுத்துவதில் அரசாங்கத்திற்கு உண்மையான கரிசனை இருக்குமெனில் அபிவிருத்தி, மற்றும் புனர்வாழ்வு போன்ற விடயங்களில் அரசு கூடிய கவணம் செலுத்த வேண்டும்.
இதன் பயனாகப் பாரபட்சம், பயம், பாதுகாப்பின்மை போன்ற எத்தகைய மனநிலைகளுக்கும் உட்படாது முஸ்லீம்களது பூர்வீகக் கானிகளில் மீளக்குடியேற்றத்திற்கு சாத்தியமாக இருக்கும். இதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்குவது தொடர்பான தார்மீகக் கடமை நன்கொடை வழங்கும் நாடுகளுக்கு இருக்கின்றது.
மேலான உடனடி பரிசீலனைக்கு:-
ஏனைய விடயங்களைவிட முதான்மையானதும் முன்னுரிமையளிக்க வேண்டியதுமான முதல் விடயம் யாதெனில் அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சனைக்கு சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஓர் தீர்வை காண வேண்டும். அதே நேரம் இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில் நம் நாட்டில் வாழும் ஏனையோர் பெறக் கூடிய இட ஒதுக்கீடு முதல் கல்வித்தகமை வரை விகிதாசார அடிப்படையில் இலங்கை முஸ்லீம்களும் பெற வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் முஸ்லீம்கள் தாம் ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உட்பட்டிருந்த அகதி வாழ்க்கையை மேலும் தொடர தயாரில்லை. அவர்கள் இதற்குப் பின்னும் அடிமைகளாக ஒதுக்கப்பட்டு வாழ்வதை விரும்பவில்லை. அதேநேரம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லீம்களது காணிகளில் இராணுவத்தின் உதவியோடு சிங்களக் குடியேற்றம் மற்றும் காணி இட ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமன்றி இந் நடவடிக்கை மிகக்கண்டிக்கப்பட வேண்டியதொன்று. பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இராணுவத்தின் உதவியோடு முஸ்லீம்களின் காணிகளை ஆக்கிரமிப்பதும், தங்களது சொந்த நிலங்களில் குடியேருபவர்களை பலவந்தமாக வெளியேற்றி அவர்களது குடிசைகளை தீவைப்பதானது இன்னுமொரு பாரிய இனமோதலுக்கு அடித்தளமிடும் செயலாகும் என்பதே எனது கருத்தாகும். இச் செயல் எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கும். எதிர்பார்த்த பயன் கிட்டாது போகும்.
உள் நாட்டில் இடம் பெயர்ந்த ஒவ்வொரு நபரும் உரிமை கோரும் அவரவரது காணிகளுக்குள் உட்செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே காணிக்கு உரிமைகோரும் பிரச்சினைகள் எழும்போது மட்டுமே அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காணலாம். இச்செயல்முறை தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக கருதப்படும் இராணுவத்தினரின் ஆதிக்கத்திற்குட்பட்ட காணிகளுக்கும்இ மேலும்இ தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக கொடுப்பனவு செய்து அல்லது கொடுப்பனவு செய்யாது தமது அதிகாரத்திற்குட்படுத்திய காணிகளுக்கும்இ பொருந்தக்கூடியதாய் இருக்க வேண்டும்.
இராணுவத்தினரும், ஏனைய படையினரும் முஸ்லீகளது காணிகளில் இருந்து விலகி வேற்று இடங்களுக்கு அவர்களது படைத்தளங்களையும், முகாம்களையும் நகர்த்தி எனது மக்களின் சுமூக வாழ்வுக்கும், அவர்களது மீளபிவிருத்திக்கும் இடமளிக்க முன்வரவேண்டும்.
யுத்தத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை மீளமைத்து கொடுப்பதுடன் தாமாகவே முன்வந்து தமது வீடுகளைக் கட்ட விரும்புவர்களுக்கு நிதி உதவியும் அத்தோடு கட்டிட நிர்மாண பொருள்களையும் வழங்க முடியும். இராணுவத்திற்கு ஏற்கனவே நிர்மாணித்த வீடுகளைஇ உள்நாட்டில் இடம்பெயர்நத மக்களின் வீடுகளை மீளக்கட்டி முடியும் காலம்வரைஇ அம் மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது காணிகளை அவர்களுக்கு விற்ற அல்லது வழங்கிய காணி உரிமையாளர்களை அரசாங்கம் தண்டிக்கக்கூடாது. கிண்ணியா முதல் கிளிநொச்சி வரை மக்களின் (குறிப்பாக முஸ்லிம்களின்) கானிகளில் முட்கம்பி வேலியடைத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சகல இடங்களையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
முஸ்லீம்களது ஆயிரக்கணக்கான வாகனங்கள்: லொறிகள்இ கார்கள்இ உழவு இயந்திரங்கள்இ இழுவைப் பெட்டிகள்இ முச்சக்கர வண்டிகள்இ மோட்டார் சைக்கிள்கள் என்பன திருத்த முடியாதபடி அழிக்கப்பட்டுவிட்டன. பல காணாமற்போயுள்ளன. புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது அதற்கான நட்டஈடு வழங்கு வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ளுர் பொதுமக்களின் பங்களிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளில் உள்ளுர் மக்களின் பங்களிப்பு ஓர் நிபந்தனையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏனைய தொண்டர் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்த பலர்இ அதே பதவி நிலையில் தொடர்ந்து இருப்பதன் விளைவாக நன்கொடை வழங்கும் நாடுகளிடமிருந்து கிடைக்கும் உதவிகள் ஒழுங்கீனமான முறையில் பகிர்ந்தளிக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே இதில் நன்கொடையாளர்கள் தலையிடுவதற்கான உரிமை இருக்க வேண்டும்.
அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளுக்கு உறுதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால் முஸ்லிம்களுக்கு எவ்வித உறுதிகளையும் வழங்கியதாகத் தெறியவில்லை). மக்கள் தமது சொந்த வீடுகளில் இன்னமும் குடியமர்த்தப்படாத நிலையில் உறுதிகளை வழங்குவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். உறுதிகள் வழங்க வேண்டுமாயின் உரிமையானர்கள் தத்தமது காணிகளை அடையாளம் காட்டி அதில் மீளக்குடியேறும் வரை அரசாங்கம் பொறுத்திருக்க வேண்டும்.
இனங்காண முடியாத நபர்களுக்கு பெறுமதிமிக்க காணிகள் மனம் போனவாறு வழங்கப்படுகின்றன. இதன் நோக்கம் தெரியவில்லையென்பதால் இவை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள பெறுமதிமிக்க காணிகள் பல நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது உள்ளுர் மக்களுடன் புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் இந் நடைமுறை ஓர் ஒழுங்கற்ற செயலாக கருதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும்;; நட்டஈடு வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமென்ற உறுதிமொழியை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கியுள்ளார். (இது முஸ்லிம்களுக்குமா அல்லது முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு மட்டுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது!?).
பாதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லீம்களின் பரிதாப நிலையை அவதானித்து, அம்மக்களின் வாழவில் சகஜ நிலை ஏற்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு இவற்றை முன்மொழிகின்றோம்.
மீளக்குடியேறிய மக்களுக்காக மட்டுமல்லாமல்இ கால்நூற்றாண்டுக்கு மேல் அமைதியானஇ சமாதான வாழ்விற்காக ஏங்கித்தவிக்கும்இ இந்நாட்டின் சகல மக்களின் விடிவிற்காக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றதேயன்றிஇ யாரையேனும் புண்படுத்துவதற்காகவோ அன்றேல் சங்கடப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை பணிவுடன் அறியத்தருகின்றோம். இயல்பு வாழ்க்கை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை அமுல்;படுத்த முயற்சிப்பதன் மூலம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதை இலங்கை அரசின் மனதில் பதிய வைக்க வேண்டுமென்று மிக நேர்மையான முறையில் தங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.
மக்கள் பார்க்குமிடம் எங்கும் அந்நியர்களும்இ புதிய சுற்றாடலும் அமைந்தஇ புதிய பிரதேசத்திலுள்ள அந்நியர் நிலத்தில் வாழ்கின்றோம் என்றில்லாதுஇ தாம் இடம் பெயர் வதற்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களுக்குஇ எவ்வித அமைப்பு மாற்றமுமின்றி தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் வந்துள்ளோமென்றஇ உணர்வு அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
இவை சரியாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் எழுச்சியும், மலர்ச்சியும் துள்ளி விளையாட பரவசத்துடன் வாழ்க்கைக்குள் நுளையும் மக்களைத்தான் நம் நாட்டில் பார்க்க முடியும். மாறாக கவணக்குறைவுடன் இருந்தால் மீண்டும் இருள் சூழ்ந்து கொள்வத மிகத் தொலைவில் இல்லை!!
எல்லாம் வல்ல நாயம் நம்மைப் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment